Friday 16 September 2016

கூந்தல் வளர, இளநரை மறைய கரிசலாங்கண்ணி

கூந்தலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் தன்மை கொண்டது கரிசலாங்கண்ணி. அதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.


கரிசலாங்கண்ணியை பற்றி தெரியாதவர்களே இல்லை. ஏன் என்றால் இந்த மூலிகை மஞ்சள் காமாலை, ரத்த சோகை, குழந்தை கண்ணுக்கு மை தீட்டுவதற்கு, முடி வளர்ச்சிக்கு, கீரையாகவும் பருப்புடன் மசியலாக சாப்பிடலாம். நிறைய மருத்துவதன்மை வாய்ந்த இந்த மூலிகையை நாம் பயன்படுத்தி பயன் அடைய வேண்டும்.

இளநரை மாற :

கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலத்தி, தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் 1/2 தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். 2 மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

தலைமுடி அடர்த்தியாக வளர :

கரிசலாங்கண்ணி இலைகளைப் பசைபோல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணையில் ஊற வைத்து, தலையில் தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும். முடி உதிர்தலும் கட்டுப்படும்.

முடி கருமையடைய :

ஒரு பிடி கரிசலாங்கண்ணி இலைகளை, 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துவர வேண்டும். படிப்படியாக இளநரை மாறி கூந்தல் கருமையாக மாறுவதை காணலாம்.

கூந்தல் வளர்க்கும் ரகசியங்கள்

தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம், மண்டைப்பகுதி வறண்டு போகாமல் காக்கப்படும்.

 
அந்தக் காலத்துப் பெண்கள், தினமும் தலைக்குத் தேங்காய் எண்ணெய் வைக்கத் தவறியதில்லை. அதன் மூலம் அவர்களது கூந்தலை வறண்டு போகாமல் காத்தார்கள். இன்று தலைக்கு எண்ணெய் வைப்பது என்பது ஏதோ செய்யக்கூடாத விஷயம் என்கிற மாதிரி ஆகிவிட்டது. இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு கூந்தலில் எண்ணெய் பசையே தெரியக்கூடாது. 

அதே நேரம் எந்த ஹேர் ஸ்டைல் செய்தாலும் கூந்தல் அதற்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. இளம் தேங்காயிலிருந்து தயாரிக்கப்படுகிற தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று அவர்கள் நம்பியது மூட நம்பிக்கையாக இருந்தாலும், அப்படி எண்ணெய் வைப்பதன் மூலம் அவர்களது கூந்தலின் ஈரப்பதம் தக்க வைக்கப்பட்டது.

தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுவதன் மூலம், மண்டைப்பகுதி வறண்டு போகாமல் காக்கப்படும். நுனிப் பிளவு இருக்காது. கூந்தல் தேங்காய் நார் போல முரடாக மாறாது. பிரச்சனைகள் இல்லாத கூந்தல் இயற்கையாகவே ஆரோக்கியமாக வளரும்தானே? கூந்தல் என்பது ஒரு வருடத்துக்கு 6 இன்ச் அளவு வளரும். அது வறண்டு, உடைந்து, உதிர்ந்து கொண்டிருந்தால் எப்படி வளரும்? எனவே, கூந்தலுக்கு தேங்காய் எண்ணெயோ, ஆலிவ் எண்ணெயோ, பாதாம் எண்ணெயோ உபயோகித்து வறண்டு போகாமல் காக்கும்பட்சத்தில் உங்கள் கூந்தலும் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

தேங்காய்ப் பாலில் ஊற வைத்து அரைத்த வெந்தயத்தைத் தலைக்குத் தடவிக் குளிப்பதன் மூலம் நீளமான முடியைப் பெறலாம். கூந்தலுக்கு போதிய ஓய்வு கொடுக்க வேண்டியதும் அவசியம். எந்நேரமும் கூந்தலைக் கோதிக் கொண்டும், வாரிக் கொண்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் போது பின்னல் போட்டு தொந்தரவு செய்யாமல் விட்டுவிட வேண்டும்.

கூந்தல் வளர்ச்சியில் உணவுக்கு மிக முக்கிய பங்குண்டு. கறிவேப்பிலையும் கீரைகளும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும். தயிரில் ஊற வைத்த வெந்தயமும் கூந்தலுக்கு நல்லது செய்யும். நட்ஸ், பேரீச்சம்பழம், மீன் மற்றும் வைட்டமின் பி அதிகமுள்ள உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நீளமான கூந்தலுக்கு வழி செய்யும்.

சீயக்காய் பொடி கூந்தலை இயற்கையான முறையில் சுத்தம் செய்து, பாதுகாக்கும். பொடுகும் இளநரையும் வராமல் தடுக்கும். ஷாம்புவில் உள்ளது போல எஸ்.எல்.எஸ், பாரபென், சிலிக்கான் என எந்த கெமிக்கலும் அதில் இல்லை. கெமிக்கல் இல்லாத பொருட்கள் நல்லது செய்கின்றனவோ இல்லையோ, கெடுதலை ஏற்படுத்தாது என்பது நிச்சயம். எனவே, முழுக்க சீயக்காய்க்கு மாற முடியாதவர்கள், அவ்வப்போது ஒரு மாறுதலுக்கு சீயக்காய் குளியலை முயற்சி செய்யலாம்.  

Thursday 17 September 2015

இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் மீன்

இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் மீன்

உணவுகளில் அடிக்கடி மீனை சேர்த்து வந்தால் எந்த நோயும் அண்டாது என்பது மருத்துவர்களின் விளக்கம்.
அதிக புரோட்டீன் சத்துள்ள மீனில், ஒமேகா 3 அமிலம் உள்ளது. இது பல்வேறு நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.
மீன் உணவு சாப்பிட்டு வருவோருக்கு ஆஸ்துமா நோய் வரவே வராது.
மூளைக்கும், கண் பார்வைக்கும் மிகவும் பயனளிக்கிறது. மீன் உணவில் உள்ள ஒமேகா 3 அமிலம் மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.lo
வெள்ளை மீன்கள் உணவுகளை காட்டிலும் கறுப்பு மீன்கள், சாலமன் மீன்கள், இதர துனா போன்ற மீன்கள் சிறந்த பலன் அளிக்கும்.
நினைவுத்திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும்.
ரத்தம் கட்டுவது, ரத்தக்குழாயில் வீக்கம், வால்வு பிரச்னை போன்ற எதுவும் வராது. இருதயத்துக்கு மிகுந்த பாதுகாப்பை தருகிறது மீன் உணவு.
மீன் எண்ணெய்யை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
ik





முதுமையைத் தள்ளிப்போடும் புரோபயாட்டிக் உணவு

முதுமையைத் தள்ளிப்போடும் புரோபயாட்டிக் உணவு



நோய்எதிர்ப்புத் திறன் தொடர்பாக ஆராய்ச்சி செய்த ரஷ்ய விலங்கியல் நிபுணர் எலீ மெட்ஷ்னிகாஃப், நோபல் பரிசும் பெற்றவர் 1915-களில் உலகின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருந்த நிலையில், பல்கேரிய விவசாயிகளின் சராசரி ஆயுட்காலம் மட்டும் 87 ஆண்டுகளாக இருப்பதைக் கவனித்தார். அது மட்டுமல்லாமல், அங்கு ஆயிரம் பேரில் குறைந்தபட்சம் 20 பேர் 100 வயதுக்கு மேல் வாழ்ந்துவந்தனர்.
அவர்களுடைய உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் வேறுபட்டிருப்பதையும் அவர் அறிந்தார். புரோபயாடிக்குகளால் செறிவூட்டப்பட்ட பால் உள்ளிட்ட புளிக்க வைத்த உணவு பொருட்களை அதிகமாகச் சாப்பிட்டதுதான், அவர்களுடைய நீண்ட ஆயுளுக்குக் காரணம்.
புரோபயாடிக் என்றால்
புரோபயாடிக் ஓர் உயிருள்ள நுண்ணுயிரி. ஓர் அற்புத உணவும்கூட. இதைப் போதுமான அளவு உட்கொண்டால், உடலுக்கு நன்மை கிடைக்கும்.
பால் பொருட்கள், புளிக்க வைத்த உணவுப் பொருட்கள், செறிவூட்டப்பட்ட உணவு வகைகள், மாத்திரை மருந்து, உலர்ந்த வடிவம், வித்துப் படிவங்கள், திரவமாக புரோபயாட்டிக்குகள் கிடைக்கின்றன.
ஆரம்பத்தில் மாற்று மருத்துவ முறையில்தான் புரோபயாடிக் அதிகம் பரிந்துரைக்கப்பட்டுவந்தது. இப்போது அலோபதி மருத்துவத்திலும் புரோபயாட்டிக் பரிந்துரைக்கப்பட ஆரம்பித்துவிட்டது.
ஆரோக்கியத்தை பாதுகாக்க அனைத்து வயதினரும் புரோபயாடிக்கை பயன்படுத்த முடியும். அது வாழ்நாளை நீடிக்கும், வயதான தோற்றத்தை மட்டுப்படுத்தும்.
நோய்க் கட்டுப்பாடு
பொதுவான வயிற்றுப்போக்கு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்க புரோபயாட்டிக் பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமல்ல, புற்றுநோய் செல்கள் பெருகுவதைத் தடுக்கவும், மட்டுப்படுத்தவும் உதவுகிறது.
பெப்டிக் அல்சர், இரைப்பைப் புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி என்ற பாக்டீரியாவின் வளர்ச்சியைப் புரோபயாட்டிக் தடுக்கிறது. குடல் அழற்சி நோயைத் தடுப்பதிலும், அதன் தீவிரத் தன்மையைக் குறைத்து நிவாரணம் அளிப்பதிலும் புரோபயாட்டிக் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வயிற்றில் அழற்சி ஏற்படக் காரணமாக இருக்கும் சைட்டோகைன்கள் உருவாவதை புரோபயாட்டிக் தடுத்து, இரைப்பையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் குடலில் நோய் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆயுள் நீட்டிப்பு
தோல் ஒவ்வாமை, ஜலதோஷம், காய்ச்சல், சளி, ஆஸ்துமா போன்றவற்றை புரோபயாடிக் மூலம் கட்டுப்படுத்தமுடியும்.
திட்டவட்டமான உணவுப் பழக்கத்துடன், புரோபயாட்டிக் அதிகமுள்ள புளித்த பால் பொருட்கள், தயிர், சீஸ், வெண்ணெய், குறைந்த லாக்டோஸ் உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொண்டுவந்தால், முதுமையைத் தள்ளிப்போடலாம், ஆயுளையும் நீட்டித்துக் கொள்ளலாம்.
 

வெள்ளை உணவின் கறுப்புப் பக்கம்

வெள்ளை உணவின் கறுப்புப் பக்கம்





இன்றைக்கு உணவகங்களுக்குச் சென்று இரவு உணவு சாப்பிடும் பெரும்பாலோரின் விருப்ப உணவாக இருப்பது பரோட்டா அல்லது புரோட்டா.
இந்தப் பரோட்டா தயாரிக்கப் பயன்படுவது ‘வெள்ளை கோதுமை’ என்றழைக்கப்படும் மைதா.கோதுமை மிகப் பழமையான தாவரப் புரதம். கோதுமையில் புரதம் மாவு வடிவில் இருப்பதால், 99 சதவீதம் எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், மைதா அப்படிப்பட்டதல்ல என்கிறது ஏற்காடு இளங்கோ எழுதிய ‘பரோட்டா’ என்ற புத்தகம்.
மைதா என்பது கோதுமையின் எண்டோஸ்பெர்மில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. எண்டோஸ்பெர்ம் எனப்படும் கோதுமையின் உள்பகுதியை அரைத்தால், மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனுடன் அசோடிகார் போனமைட், குளோரின் வாயு, பென்சாயில் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள், மிருதுவாக மாற்ற அலக்ஸான் எனும் வேதிப்பொருள் போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது மைதா.
மாவை பிளீச் செய்யப் பயன்படும் பென்சாயில் பெராக்சைடு வேதிப்பொருளுக்குச் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மரவள்ளிக் கிழங்கிலிருந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது.
இந்த மைதாவில் சர்க்கரைச் சத்தைக் கொண்ட 100 சதவீத ஸ்டார்ச் எனப்படும் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. நார்ச்சத்து, வைட்டமின், புரதம் போன்ற எதுவுமே இருக்காது. இதனால் எளிதில் ஜீரணமாகாது.
பரோட்டா சாப்பிடுவதால் உயர் ரத்தஅழுத்தம், மாரடைப்பு, இதய நோய்கள், உடல் பருமன், புற்றுநோய், நீரிழிவு நோய், சிறுநீரகக் கல், மன அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படலாம். பரோட்டா மட்டுமல்லாமல் மைதா மூலம் தயாரிக்கப்படும் எல்லாப் பேக்கரி உணவுகளாலும் இந்த நோய்கள் வரக்கூடும் என்று எச்சரிக்கிறது இந்தப் புத்தகம்.

Wednesday 16 September 2015

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்

முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, முடி உதிர்வை தடுக்க முட்டையை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

முட்டைகள் எக்ஸ்ட்ரா
வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கும் முறை:

இரண்டு முட்டைகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுங்கள். பின் நுரை வரும் வரை மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து நன்றாக கலக்குங்கள். கலவை அடர்த்தியாக வருவதற்கு அதனை 4 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக அடிக்கவும். இதோ, உங்கள் தலை முடிக்கான மாஸ்க் தயார்.

இந்த கலவையை தலை முடியில் தடவுவதற்கு முன்பாக, தலை முடியை மிதமான ஷாம்புவை கொண்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள். தலை முடி ஈரமாக இருக்கும் போது, இந்த கலவையை முடிகளின் வேர்கள், தலைச் சருமம் மற்றும் நுனிகளில் படும்படி தடவுங்கள். இப்போது தலையில் ஷவர் கேப் அணிந்து கொண்டு 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.

அதன் பின் சாதாரண ஷாம்புவை கொண்டு தலையை அலசி விடுங்கள். முட்டையில் உள்ள புரதம் உங்கள் முடியை திடமாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும். அதே போல் ஆலிவ் எண்ணெய் உங்கள் முடிக்கு நீர்ச்சத்தை அளித்து ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படும். இதை வாரம் ஒரு முறை போடுவதன் மூலம் முடி உதிர்வது குறைந்து மீண்டும் வளர தொடங்கும்.

வீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி?

வீட்டிலேயே பழங்களை கொண்டு பேஷியல் செய்வது எப்படி?
 
உடலிற்கு தேவையான வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களை பழங்கள் அளிக்கின்றன. அந்த பழங்களை கொண்டு வீட்டிலேயே முகத்தை பராமரிக்க எளிய முறையில் தயார் செய்து உபயோகிக்கலாம். மாசடைந்த சூழல் காரணமாக வெளியே சென்று வந்தாலே முகம் கறுத்துவிடும். இதனை போக்க பழக்கூழ் மாஸ் போடும் முன்பு முகத்தை நன்றாக சுத்தம் செய்யவேண்டும்.

அதற்கு முதலில் கிளன்சிங் செய்யவேண்டும். ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பாலை எடுத்து முகம் முழுவதும் பூச வேண்டும். பின்னர் மெதுவாக தேய்க்கவேண்டும். 5 நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சைக் கொண்டு துடைக்கவேண்டும். இதனால் முகத்தினுள் படிந்திருக்கும் அழுக்கு நீங்கிவிடும். சூரியக்கதிர் தாக்குதலினால் ஏற்படும் கருமையை தயிர் போக்குகிறது. தேன் பயன்படுத்தியும் சருமத்தை மசாஜ் செய்யலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் தேனுடன் பப்பாளிக்கூழ் சேர்த்து மசாஜ் செய்யலாம்.

தக்காளி, ஆரஞ்ச், கொய்யாப்பழம், வாழைப்பழம் போன்றவைகளையும் கூழ் போல மசித்து மசாஜ் செய்யலாம் முகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். மசாஜ் முடிந்தவுடன் ஸ்கிரப் செய்ய வேண்டும். வால்நெட், பாதாம் இவற்றைப் பொடியாக அரைத்து ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். சருமத்தில் அதிக கருப்பு வெள்ளை இருந்தால் சர்க்கரையைப் பொடித்து அத்துடன் சிறிது பப்பாளி விழுதை சேர்த்து முகத்தில் அழுத்தி தடவ வேண்டும். இதனால் இறந்த செல்கள் உதிர்ந்து விடும்.

பின்னர் சிறிய டவலைக் கொண்டு வெந்நீரில் நனைத்து பொறுக்குமளவு சூட்டுடன் முகத்தின் மேல் போட்டு மூன்று நிமிடங்கள் கழித்து எடுக்க வேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும். இந்த முறையை பின்னபற்ற முடியாதவர்கள் சிறிய பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் அதனுள் வேப்பிலைகள் சிறிது போட்டு அதோடு சேர்த்து ஆவி பிடித்தால் மிகவும் நல்லது. அடுத்து பேசியல் போடலாம். முகத்திற்கு பேக் போட நமக்கு தேவையான பழங்களை தேர்ந்தெடுக்கவேண்டும்.

கேரட், ஆப்பிள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தேன், வெள்ளரி, ஸ்ட்ராபெரி, பேரீச்சம் பழம், எலுமிச்சைச்சாறு சிறிதளவு இவற்றில் ஏதாவது ஒன்றை நன்றாக அரைத்து பேக் போட்டு அரைமணி நேரம் ரிலாக்ஸ் ஆக இருக்கவேண்டும். பின்னர் முகம் கழுவினால் உங்கள் முகத்தைப் பார்த்து நீங்களே அசந்துபோவீர்கள். அந்த அளவிற்கு முகம் பொலிவாய் மாறும். பழங்களை தனியாகவும் அரைத்து பேசியல் போடலாம் அல்லது இரண்டு, மூன்று பழங்களைச் சேர்த்து அரைத்தும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.